தொடர்புடைய செய்திகள்
- 21 வயது பெண்களுக்கு 2 லட்ச ரூபாய்! – தமிழக அரசு அறிவிப்பு!
- குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியா?? கன்ஃப்யூஸான இல.கணேசன்
- தலைவர் ஆன் டிஸ்கவரி: பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்!!
- சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணி! – தடையை மீறி செல்லும் போராட்டக்காரர்கள்!
- லயன்ஸ் கிளப்பும், சட்டமன்றமும் ஒன்னுதான்; எதுக்கும் லாயக்கு இல்ல: ஆரம்பிச்சுடாருல எச்.ராஜா!!
”கத்தியின்றி, ரத்தமின்றி, கருத்தடை செய்துகொள்ள வாருங்கள்” ஆண்களுக்கு கோரிக்கை விடுக்கும் விஜயபாஸ்கர்
கருத்தடை சிகிச்சை செய்துக்கொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில் அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
மேலும், “ஆண்களுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு 80 பேருக்கும், 2019 ஆம் ஆண்டுக்கு 800 பேருக்கும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
