தொடர்புடைய செய்திகள்
- இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
- தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை! – களைகட்டும் அகல் விளக்குகள் விற்பனை!
- மாமல்லபுரம் நினைவு சின்னங்களை பார்க்க இலவச அனுமதி! – தொல்லியல் துறை அறிவிப்பு!
- கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – மழை தொடரும்..!
- உடல் ஆரோக்கியத்தில் மீன் எண்ணெய்!
வேலூரில் வீடுகள் இடிந்து 9 பேர் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
வேலூரில் வீடுகள் இடிந்து 9 பேர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் கனமழை காரணமாக 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
