1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (10:41 IST)

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் கைது

arrest
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை அருகே பொள்ளாச்சி என்ற பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை அருகே பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகார்களின் அடிப்படையில் 43 வயதான ஆசிரியர் பாலசந்திரன், 46 வயதான ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களிடமும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த சம்பவம் கோவை பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது