1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:34 IST)

கோயிலுக்கு தூக்கிச் சென்று பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்த கும்பல்!

நாகை மாவட்டத்தில் கோயிலுக்கு தூக்கிச் சென்று ஒரு பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் நகர் காலணியைச் சேர்ந்தவர் அந்த பெண். கணவனை இழந்து தனியாக வாழும் இவர் கட்டிட வேலைகளுக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது சகோதரி வீட்டுக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் பெண்ணை கடத்திக் கொண்டு போய் ஒரு கோயிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் சகோதரி வீட்டுக்கு சென்று இதுபற்றி போலிஸில் புகாரளிக்க கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக போலிஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.