தொடர்புடைய செய்திகள்
- அவரை மட்டும் நம்பிவிடாதீர்கள்: கருணாநிதி கூறிய அந்த நபர் யார்? ராம்தாஸ் டுவிட்
- சட்டசிக்கலில் கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பதவி ? நடவடிக்கை எடுக்குமா அ.தி.மு.க தலைமை ?
- மதுக் கடைகளை திறந்தால் ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் செய்த அதிமுகவினர்: பெரும் பரபரப்பு
- அரசியல் பண்ண நாங்களும் ரெடி!- முன்னாள் திமுக ஆலோசகரை பிடித்த அதிமுக!
- அதிமுக அரசின் ஊழல் பட்டியல்!? – தேர்தலுக்கு தயாராகிறதா திமுக?
தி.மு.க.வினரோடு அதிமுக கள்ள கூட்டணி: டிடிவி பகீர் டிவிட்!
தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக டிடிவி தினகரன் டிவிட் போட்டுள்ளார்.
அவர் இது குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாக தூர்வாரினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
