தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 37 சிறப்பு சிறைச்சாலைகள்: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை!
- இதுலயும் ஆல்கஹால்தானே இருக்கு! – மது கிடைக்காமல் ஷேவிங் லோஷனை குடித்தவர்கள் பலி!
- கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது - சுகாதாரத்துறை செயலாளர்
- இன்று பாசிட்டிவ் ஆன 102 பேர்களில் எத்தனை பேர் டெல்லி ரிட்டர்ன்ஸ்: அதிர்ச்சி தகவல்
- டோக்கன் பெற்றவர்களுக்கு நாளை ரூ.1,000 வழங்கப்படும் - தமிழக அரசு
நாளை ரேஷன் கடைகள் செயல்படாது: தமிழக அரசு அறிவிப்பு!
நாளை வீடுகள்தோறும் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற இருப்பதால் ரேசன் கடைகள் செயல்படாது என அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணமும், ஏப்ரல் மாத ரேசன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் கூடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிற்கே வந்து டோக்கனுடன் நிவாரண பணமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதன்படி நாளை ஏப்ரல் மாத ரேசன் பொருட்களை யார் எந்த தேதியில் பெற்றுக்கொள்வது என்பது குறிப்பிடப்பட்ட டோக்கனும், ஆயிரம் ரூபாய் பணமும் நாளை ஒவ்வொரு வீடுகளிலும் ரேசன்கடை ஊழியர்கள் வழங்க இருக்கிறார்கள். அதனால் ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
