தொடர்புடைய செய்திகள்
- பாஜகவுக்கு எதிரான பத்திரிகைகள்! பட்டியல் தயார், நடவடிக்கை எப்போது?
- கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தூக்கு போட்டுக்கொண்ட பெண்.. சாவில் மர்மம் உள்ளதா?
- இரவு நேரங்களில் சாலைகளில் நடமாடும் சிறுத்தை.. பொதுமக்கள் உஷார்
- இனி அனுமதியின்றி ஜல்லிகட்டு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை
- மீன் வாங்க போன வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்…
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
