1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (07:49 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பல பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தேனி தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை உள்பட மற்ற அனைத்து பகுதிகளிலும் இன்று வறண்ட வானிலை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva