1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (12:29 IST)

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!!

எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 72 குண்டுகள் முழங்க எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தியது.