தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட் விவகாரம் ; அரசு ஆதரவு பயங்கராவதம் : ராகுல் காந்தி கண்டனம்
- ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு
- தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் - வைகோ பேட்டி (வீடியோ)
- மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது - தமிழக அரசு வாதம்
- ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு - தமிழக அரசு அதிரடி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலரும் காயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தலைமை செயலாலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து வலியுறுத்தினார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன் படி, தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
