1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:25 IST)

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்? நாளை ஆலோசனை!

நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமான நிலையில், தமிழகத்தில் தினசரி பாதிப்பு 8,000-த்தை நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்தப்படவுள்ளதாம். 

 
ஆம், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். ஆனாலும் கொரோனா தொற்று குறையவில்லை. இதனையடுத்து தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.