வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (10:03 IST)

பெண்ணின் வீட்டுக்கு சென்ற இரு கள்ளக்காதலர்கள் – ஒருவர் கொலை !

பெண்ணின் வீட்டுக்கு சென்ற கள்ளக்காதலர்களுக்கிடையில் வாக்குவாதம் எழுந்ததில் ஒருவர் மற்றவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில்தான் ஊருக்குத் திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் ஜெயந்தி.

இந்நிலையில் ஊருக்கு வந்த இவருக்கு அருகில் உள்ள ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே கிருஷ்ணன் என்ற கள்ளக்காதலரும் இருந்ததால் அவருக்கும் ரமேஷுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் வீட்டுக்கு ரமேஷ் சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரத்தில் கிருஷ்ணனும் அதே வீட்டுக்கு செல்ல அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கிருஷ்ணன் ரமேஷைக் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.