சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2016 (08:27 IST)

சென்னையை மிரட்டிய இடி, மின்னல், மழை

சென்னையை மிரட்டிய இடி, மின்னல், மழை

இடி மின்னல் மழை காரணமாக நேற்று இரவு சென்னை திக்குமுக்காடிப்போனது.
 

 
சென்னை, திருவல்லிக்கேணி, தாம்பரம், கே.கே.நகர், அடையாறு, சேத்பட் உள்ளிட்ட நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை வெளுத்து வாங்கியது.
 
மேலும், பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்த காரணத்தினால், சென்னை நகரமே திக்குமுக்காடிப்போனது. குறிப்பாக, கடும் காற்று, கன மழை இடி மின்னல் பல முகங்களில் வானிலை மிரட்டியது. இதனால், சென்னையில் பல பகுதிகளில் மரங்கள் வேராடு சாய்ந்து விழுந்தன. மின்சார வினியோகம் தடைபட்டது. மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
 
இரவில் பெய்த கன மழை தற்போது நின்றுவிட்டாலும், மேகம் கருத்தபடியே உள்ளது. ஆனால், இதமான காற்று மக்களை தாலாட்டியபடியே உள்ளது.