1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:10 IST)

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு - விரைவில் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் தமிழம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறு அன்று மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 
இந்த வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வெளியாகலாம்.