1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 மே 2023 (13:25 IST)

என்ன சித்து வேலை செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை: திருமாவளவன்

தமிழ்நாட்டில் பாஜக என்ன சித்து வேலை செய்தாலும், எத்தனை அச்சுறுத்தல்களை செய்தாலும் இங்கு அவர்களுக்கு இடம் இல்லை என்பதை 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் நிரூபணம் செய்வார்கள் என -விசிக தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கருப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ‘
செங்கோலை ஏந்துகிறோம் என்ற பெயரில் நடத்துகிற நாடகம், அரசியல் சூதாட்டம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளோம்;
 
ஆதீனங்களை அழைத்து சிறப்பிப்பது தமிழ்நாட்டு மக்களை குறி வைத்து காய்களை நகர்த்தி சங்பரிக்குவார் அமைப்புகள் செய்கின்ற சூது, ஏமாற்று வேலை” என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
 
Edited by Siva