வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (17:32 IST)

இவர்களுக்கு மட்டும்தான் ரேசனில் பொருட்கள்

சேலம் மாவட்டத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு அறிவுரை கூறியுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் கூடும் கூட்டத்தால் கொரொனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கொரொனா தடுப்பூசி போட்டால் மட்டும்தான் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.