1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (16:28 IST)

ஆசிரியர் திட்டியதால்...மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன் !

கர்நாடக மாநிலத்தில்  ஆசிரியர் திட்டியதால் மாடியில் இருந்து மாணவன் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் வசித்து வருபவர் மோஹின். இவர் அங்குள்ள பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் பிட் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆசிரியரிடம் பிடிப்பட்ட அவரை ஆசிரியர் கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளார்.

அன்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸிக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைவில் வந்த போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj