1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Palniswami Slams DMK Government Over Rising Crime Rate

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். போதைப்பொருள் விற்பனையே கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணம் என்றும், இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 
கடந்த காலங்களில் மக்கள் தங்கத்தின் விலை என்ன, வெள்ளியின் விலை என்ன என்று கேட்பார்கள். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 'கொலை விகிதம்' என்ன என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளது.
 
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை பெருகியிருப்பதே இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம். கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பரவலாக விற்கப்படுவதால், இளைஞர்கள் அதற்கு அடிமையாகி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
 
"தி.மு.க. அரசு போதைப்பொருள் விற்பனையை தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பொதுமக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது," என்று எடப்பாடி பழனிசாமி மேலும் கூறினார்.
 
இந்தக் குற்றச்சாட்டுகள், தி.மு.க. அரசுக்கு எதிராக அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தண்ணீரை தடுத்து பாருங்க.. தக்க பாடம் கற்பிப்போம்! - இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்!