1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (17:08 IST)

திமுக அரசு பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் கடந்தாண்டு  நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்  முதல்வராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து கொரொனா காலத்தில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை என  அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜு  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூ.2500 கொடுக்கும்போது, திமுகவினர் ரூ.5000 கொடுக்கச் சொன்னார்கள். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு இந்தாண்டு பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லலை என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செல்லூர் ராஜூ முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தகக்து.