1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:26 IST)

8ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்..!

எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர்  அருள் ஜீவன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். எட்டாம் வகுப்பு மாணவனை ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதனால் சிறுவன் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. 
 
சிறுவனின் தந்தை அளித்த புகாரை அடுத்து  ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran