தொடர்புடைய செய்திகள்
- தென்னிந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய தமிழகம்! – ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை!
- 100 பேருக்கு சோதனை செய்தால் 10 பேருக்கு கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் சென்னை!
- ஆளாளுக்கு கருத்து சொன்னா பதில் சொல்ல முடியாது! – ஜெயக்குமார் கறார்!
- தன்னை தானே கடத்தி கொண்ட சிறுவன்; தந்தைக்கு பணம் கேட்டு மிரட்டல்
- பான் இந்தியா....படமாகும் தனுஷின் அடுத்த பிரமாண்ட படம்...எகிறும் எதிர்பார்ப்பு
காத்திருக்குது கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?? – வானிலை ஆய்வு மையம்!
அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நாளை அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
