தொடர்புடைய செய்திகள்
- மின்சார ரயில்கள் ரத்து….ரயில்வேதுறை அறிவிப்பு
- சைவ உணவகத்தில்தான் நிறுத்தனுமா..! சர்ச்சையால் முடிவை மாற்றிய போக்குவரத்துத் துறை!
- 17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் !
- முதலீடுகளை ஈர்க்கவா..? சொந்த பயணமா..? – முதல்வர் பயணம் குறித்து ஜெயக்குமார்!
- பான், குட்கா தடுப்பு நடவடிக்கை; 9 நிறுவனங்களுக்கு சீல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
