1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:14 IST)

அதிகரித்து வரும் கொரோனா; கிராமசபை கூட்டங்கள் ரத்து! – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 15 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.