1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (10:49 IST)

மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் - முதல்வர், துணைமுதவ்வர் மரியாதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன் இன்னுயிரை நீர்த்த மகான் மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
 
டெல்லியில் உள்ள மகாத்மா மாந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தொடர்ந்து காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை மெரீனாவில் உள்ள காந்தியின் சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.