1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:27 IST)

ஆண்டுக்கு 100க்கும் மேல் சிறுவர் கொலையாளிகள்! – அதிர்ச்சி அளிக்கும் தமிழக ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சிறுவர்கள் கொலைகாரர்களாக மாறும் சம்பவம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் நாட்டில் நடைபெறும் குற்றங்கள் சார்ந்த டேட்டாவை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் சிறுவர்கள் குற்றவாளிகளாக ஆனது குறித்த குற்ற ஆவண தரவை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 104 சிறுவர்கள் கொலை வழக்கில் சிக்கியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் கொலை வழக்கில் சிக்கிய சிறுவர்கள் எண்ணிக்கை 48 ஆக இருந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குள் 2 மடங்காக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.