1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (16:28 IST)

காணாமல் போன படகுகளில் 3 கரை சேர்ந்தன..

கன்னியாகுமரி மீனவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து அவர்களை கண்டுபிடிக்க கோரி புகார் அளித்த நிலையில், 3 படகுகள் கரை சேந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டத்தின் வள்ளவிலை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஏற்கனவே அரபி கடலில் புயல் சின்னம் குறித்தான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 90 மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது 3 படகுகளில் இருந்த 30 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படகுகள் கோவா, கொச்சி ஆகிய பகுதிகளில் கரை சேர்ந்தன எனவும் கூறப்படுகிறது.