செவ்வாய், 3 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (14:14 IST)

ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை - ஸ்டாலின் முடிவு என்ன??

ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை - ஸ்டாலின் முடிவு என்ன??
தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என மருத்துவ குழு பரிந்துரை. 

 
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை காலை 6 திங்கள் கிழமை காலை 6 மணியோடு முடிகின்றது. கொரோனா இரண்டாம் கட்ட அலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது. 
 
பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பின்னர் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து தமிழகத்தில் 9000க்குள் வந்துள்ளது. கொரொனா பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர்,கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் சில தளர்களுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.
 
இந்நிலையில் இன்று மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின். அதில் மருத்துவ குழுவினர், தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம். எனவே, கொரோனா தொற்று இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும், பாதிப்பு குறையாத மாவட்டங்களுக்கு ஊரடங்கு தொடரப்படும் என தெரிகிறது.