1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendra
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (13:24 IST)

ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்து சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து மூழ்கிய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 6,038 மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் 
 
மேலும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூபாய் 300 கோடி ஒதுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்