1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:59 IST)

அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் திமுக ஆட்சியில் தொடங்கியதிலிருந்து இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு எடுப்பதில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்டெடுப்பது வரை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது தெரிந்தது
 
அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழ் அர்ச்சனை தொடங்கப்படும் என்றும் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு அதில் அர்ச்சகர் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.