1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (11:24 IST)

கோவில்கள் என்ன தனியார் சொத்தா? எப்படி கொடுக்க முடியும்? – அமைச்சர் சேகர் பாபு கறார்!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு கறாராக கூறியுள்ளார்.

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சில காலமாக எழுந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “அறநிலையத்துறை கோவில்கள் தனியார் சொத்து அல்ல. அரசு சொத்துகளை நியமிக்கும் பொறுப்பை எப்படி தனியாரிடம் வழங்க முடியும்? குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர குழப்பம் செய்ய கூடாது” என தெரிவித்துள்ளார்.