1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:47 IST)

10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்ட அண்ணா பல்கலை: அதிர்ச்சி தகவல்

தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் ஆப்ஷன் போட்டுள்ளது
 
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளதாக மாணவர்கள் மத்தியில் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.