1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (15:34 IST)

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

PM Modi
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களிடம் பண மூட்டைகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சந்தேஷ்காலி சம்பவம் வங்காள பெண்களை உலுக்கியது என்றார்.  வங்காள பெண்கள் திரிணமூல் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் சந்தேஷ்காலியில் நடந்த பாவம் ஒட்டு மொத்த வங்காள சகோதரிகளையும் சிந்திக்க வைத்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
 
அம்பேத்கர் ஒரு நபரின் நம்பிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தார். ஆனால் இப்போது,இந்தியா கூட்டணி, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறது  என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
கர்நாடகாவில், அவர்கள் ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அளித்தனர் என்றும் மேலும் இந்த சதியில் காங்கிரஸை, திரிணமூல் காங்கிரஸ் ஆதரித்தது என்றும் பிரதமர் தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்த அவர், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ஏராளமான பணம் சிக்கியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.


அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களிடமும் பண மூட்டைகள் உள்ளன என்றும் ஆனால் நான் உங்களிடம் எதையும் மறைக்க முயற்சித்திருக்கிறேனா? என்றும் பிரதமர் மோடி கூறினார்.