காவிரி விவகாரம்: மாணவர்கள் தூக்குப்போட்டு நூதன போராட்டம்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பதை கண்டித்து தஞ்சையில் மாணவர்கள் பச்சை துண்டால் தூக்குப்போட்டு நூதன போராட்டம் செய்தனர்.
இந்நிலையில், தஞ்சயை அடுத்த வல்லம் பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு மாணவர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில், மாணவர்கள் பச்சை துண்டால் தூக்குப்போட்டு நூதன போராட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவர்களை பேசி சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
