தொடர்புடைய செய்திகள்
- ''மின்சாரம் பாய்ந்து தாய் பலி''.. இரவில் இறுதிச் சடங்கு...காலையில் .மகளுக்கு திருமணம்
- 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும்: சென்னை மேயர் அறிவிப்பு
- காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு... நண்பர்களே கொலை செய்து புதைத்தது அம்பலம்..!
- ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்: வைரல் புகைப்படங்கள்..!
- ’ரோஜா’ சீரியல் நடிகை காதலருடன் திருமணம்
திருமண விழாவில் நடனமாடிய மாணவர் உயிரிழப்பு: சென்னையில் சோகம்..!
சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திருமண விழாவில் சோக நிகழ்வு நடந்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் திருமண விழா ஒன்று நண்பர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர் ஒருவர் நடனம் கொண்டிருந்தார்
இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அடுத்து அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் சத்யசாய் ரெட்டி என்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
உயிரிழந்த மாணவர் சத்யசாய் ரெட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்பதும் கூறப்படுகிறது. திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழந்த விவகாரம் திருமண வீட்டாரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
