1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (11:11 IST)

கடவுளை இழிவுபடுத்துவோரை தண்டிக்க தனி சட்டம் வேண்டும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகம் வழங்கும் ராமர், சீதை குறித்து இழிவாக பேசியவரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டாள், முருகன் பற்றி அவதூறாக பேசியவர்கள் கூட கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஹிந்து கடவுளை இழிவாக பேசுபவர்களால் தமிழக முதல்வருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அவ்வாறு பேசுபவர்களை குண்டல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் கடவுளை இழிவாக பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் உலக அளவில் இந்து மதம் குறித்து தவறாக பேசுபவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran