ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (13:08 IST)

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 14 ஆம் தேதி வரை சிறை!

ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அது மட்டுமன்றி தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த படகுகள் இலங்கை அரசால் ஏலம் விடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 தமிழக மீனவர்களை கைது செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.