தொடர்புடைய செய்திகள்
- 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை.. சிவி சண்முகத்திற்கு அண்ணாமலை எச்சரிக்கை..!
- பாஜக நிர்வாகி தீக்குளிப்பு....காவல்துறைக்கு அண்ணாமலை எச்சரிக்கை
- அமைச்சர் சேகர்பாபு செப்.10-க்குள் பதவி விலகாவிட்டால்... அண்ணாமலை எச்சரிக்கை..!
- பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்; திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!
- காங்கிரஸ் நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முதல்வர் சென்றால்... அண்ணாமலை எச்சரிக்கை..!
விரைவில் சென்னை முழுக்க மிகப்பெருமளவில் போராட்டம் வெடிக்கும் -அண்ணாமலை எச்சரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி செல்லப் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகளில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ஆத்திரமடைந்து பயணிகள் புகார் அளித்து, பேருந்துகளை சிறைப்பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, குழந்தைகள், தாய்மார்கள் வயது முதியவர்கள் என 100க்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாக தயாராகும் வரை பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்; விரைவில் சென்னை முழுக்க மிகப்பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
