1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (20:40 IST)

ரயில் எஞ்சினில் கொம்பேறி மூக்கன் பாம்பு: ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு

கேரளாவில் இருந்து ஈரோடு வந்த ரயில் இன்ஜினில் திடீரென கொம்பேரி மூக்கன் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஈரோடு ரயில் நிலையத்திற்கு கேரளாவிலிருந்து வந்த சரக்கு ரயில் இன்ஜினில் கொம்பேறி மூக்கன் பாம்பு இருந்ததை ரயில் இன்ஜின் டிரைவர் கண்டுபிடித்தார்
 
இதனை அடுத்து ஒரு மணிநேரம் முயற்சித்தும் அந்த பாம்பு பிடிபடாமல் தப்பி சென்றது இந்த நிலையில் பாம்பு வெளியேறியதை உறுதி செய்த பின்னரே ஓட்டுநர் மீண்டும் ரயிலை இயக்கி சென்றார். இந்த சம்பவத்தால் ஈரோடு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது