ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (13:23 IST)

பெண் குழந்தைகளின் மார்பிங் புகைப்படங்கள்: காவல் நிலையத்தில் சின்மயி புகார்

Chinmayi
பெண் குழந்தைகளின் மார்பிங் செய்த புகைப்படங்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவதாக காவல்துறையில் பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார் 
 
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் சின்மயி என்பதும் மீடூ புகார் விஷயத்தில் இவர் பரபரப்பாக பேசப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில்  பெண் குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து தங்கள் நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவதாக தேவ் ராகுல் என்பவர் மீது பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார் 
 
தங்களது நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தேவ் ராகுல் நடந்து கொள்வதாகவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது