1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (21:40 IST)

திருமணம் செய்ய வற்புறுத்தியதாக பெண் புகார்....சினிமா தயாரிப்பாளர் கைது..

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து அரும் சினிமா தயாரிப்பாளர் வராகி(46). அதே குடியிப்பில் தன் பெற்றோருடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வராகியிடம் வேலை செய்து வந்த நிலையில் அவரது நடவடிக்கை பிடிக்காமல் விலகிவிட்டார். 

.ஏற்கனவே திருமணமான வராகி தன்னை இரண்டாவதாக திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும் தொடந்து தொல்லை கொடுத்து வந்ததால் இருவருக்கும் இடையே தராறு ஏற்பட்டுள்ளது.  நேற்று மாலை இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற வராகி தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பெண் காவல்துறை கட்டுப்பாட்டுப அறைக்கு தகவல் தெரிவித்தார்.  இதுகுறித்து வடபழனி மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர், அதில், வராகியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது