1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (11:54 IST)

மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல்.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் கோரிக்கை..!

நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டபோது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை  தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி ரவி தெரிவித்திருந்தார்.  
 
இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி இந்த மனுவை விசாரிக்க மறுத்து சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.  
 
இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அள்ளி உத்தரவை தொடர்ந்து இன்று செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மனுவை விசாரிக்க செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆதியோர் நீதிபதி ரவி முன் ஆஜராகி கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Mahendran