தொடர்புடைய செய்திகள்
- தொடங்கியது தர்மயுத்தம் 2.0 !? – ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்!
- தப்பு மேல் தப்பு பண்ணும் ஓபிஎஸ்... ஜெயகுமார் காட்டம்!
- பொதுக்குழு கூட்டத்துக்கு போகாதீங்க..! – ஓ.பன்னீர்செல்வம் திடீர் கடிதம்!
- அதிமுக பொதுக்குழு கூட்டம்; குவிந்த வழக்குகள்! – மொத்தமாக 3 மணிக்கு விசாரணை!
- அதிமுக பொதுக்குழு கூட்டம் - வானகரத்தில் பலத்த பாதுகாப்பு!!
இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? வெட்கக்கேடு - சீமான் பங்கம்!
தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா என சீமான் கண்டனம்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் சீமான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது.
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் எனும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் இலட்சணம் இதுதான். தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா வெட்கக்கேடு என பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
