திங்கள், 14 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2024 (13:28 IST)

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது யார்?அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என்ற நிலையில், இந்த ஆண்டு பள்ளிகள் விடுமுறை அளிக்கும் முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கும் வானிலை நிலவரத்தின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



Edited by Mahendran