தொடர்புடைய செய்திகள்
- குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
- சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!
- சவுக்கு சங்கர் - அண்ணாமலை இடையிலான போன் ரெக்கார்ட்.. கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!
- சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி..! கஞ்சா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு..!!
- பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த வழக்கு: இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இந்த மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா என்ற விஷயத்தில் இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை என நீதிபதி பாலாஜி தனது கருத்தை தெரிவித்த நிலையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் நீதிபதி சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்த நிலையில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் என்ன திருப்பம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva
