வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (13:44 IST)

பணிநீக்க விளக்க நோட்டீஸ் வாங்க மறுத்த சவுக்கு: சிறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

Savukku
சவுக்கு சங்கர் சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் பணிநீக்க நோட்டீஸ் கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் அறை வாசலில் ஒட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது  அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்
 
டிஸ்மிஸ் செய்ததற்கான நோட்டீசை வழங்குவதற்காக நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைக்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் மூலம் அவர்கள் நோட்டீசை வழங்கிய போது அதனை அவர் வாங்க மறுத்து விட்டார். இதனால்  சிறை அதிகாரிகள் அவருடைய சிறை அறை வாசலில் ஒட்டிவிட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன