வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (16:39 IST)

பரோலில் சசிகலா: தினகரன் கூறுவது என்ன?

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை அவ்வப்போது தினகரன் சென்று சந்தித்துவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் கூட அவர் சென்று வந்தார். 
 
தற்போது விஷயம் என்னவெனில் சசிகலா பரோலில் வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து தினகரனிடம் கேட்ட போது சசிகலா பரோலில் வரவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மை அல்ல என தெரிவித்துள்ளார். 
 
மேலும், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு என நினைத்துக்கொண்டிருந்தோம். அது ஒரு மத்திய அரசு நிறுவனம். மழையை காரணம் கூறி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
 
ஆனால் வானிலை மையம் கூறியதுபோல் மழை பெய்யவில்லை. வானிலை மையமும், அரசியல் செய்கிறதோ என்று தோன்றுகிறது. அதேபோல், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. அது தற்கொலைக்கு சமமானது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.