வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 11 மே 2017 (13:23 IST)

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா எடுத்து வர சொன்னது என்ன தெரியுமா?

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா எடுத்து வர சொன்னது என்ன தெரியுமா?

சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் டிடிவி தினகரன் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது அவரும் சிறைக்கு சென்று விட்டார். அதுமட்டுமில்லாமல் அவரது செல்வாக்கும் குறைந்து ஓரம் கட்டப்பட்டுவிட்டார்.


 
 
தனது சொல்லை கேட்காத தினகரன் அவரது விருப்பப்படியே எல்லாத்தையும் செய்து தற்போது சிக்கலில் மாட்டியிருக்கிறார் என சசிகலா தரப்பு புலம்பி வருகிறது. இந்நிலையில் சசிகலாவின் ஒரே நம்பிக்கையாக இருப்பது இளவரசியின் மகன் விவேக் தான் என கூறப்படுகிறது.
 
சசிகலாவை அதிகமாக சிறைக்கு சென்று சந்திக்கும் நபர் இவர் தான். சசிகலாவிடம் இருந்து வரும் உத்தரவுகள் அனைத்தும் விவேக் மூலமாக தான் தற்போது அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. சிறைக்கு செல்லும் விவேக் சசிகலாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முழு மூச்சாக இருக்கிறார். சசிகலாவின் குட் புக்கில் முதலில் இருப்பது விவேக்தானாம்.
 
இந்நிலையில் சமீபத்தில் சிறையில் சந்திக்க சென்ற விவேக்கிடம், தனக்கு தற்போது அக்காவோட நியாபகங்கள் அதிகமா இருக்கு. அவங்களோட புடவை ஒண்ணு எடுத்துட்டு வந்து கொடு என சசிகலா கூறியதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து நேற்று விவேக் சென்னையில் இருந்து பெங்களூரு கிளம்பிப் போகும் போது போயஸ் கார்டனில் இருந்து ஒரு பேக் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். அதில் ஜெயலலிதா அணிந்த புடவை ஒன்றையும் எடுத்துக் கொண்டு போனதாக சொல்கிறார்கள். ஜெயலலிதா அதிகமாக அணியும் அவரது பிடித்தமான பச்சை கலர் புடவைதான் இப்போது சிறைக்குள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.