1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (11:16 IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு! டிஜிபியாக பதவியேற்கிறார்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அதிகாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 27 காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன்  குழு பரிந்துரை செய்தது.

இந்த 27 காவல் துறை அதிகாரிகளில் ஒருவர் தான் சைலேஷ் குமார் யாதவ். இவர்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தென் மண்டல ஐஜி ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சைலேஷ்குமார் யாதவ் அவர்களுக்கு தற்போது தமிழ்நாடு அரசு டிஜிபியாக பதவி உயர்வு கொடுத்து உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva