1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (15:23 IST)

மாசுபடுத்திய ஆலைகளிடம் ரூ.6.88 கோடி அபராதம் வசூல்.. கலெக்டருக்கு பாராட்டுகள்

மாவட்ட ஆட்சியர் இளம்பகம்

ராணிப்பேட்டை பாலாறு  மாசுக்கு காரணமாக இருந்த ஆலைகளிடம் இருந்து ரூ. 6கோடியே 88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை விதித்துள்ள ஆட்சியர் இளம்பகத்துக்கு பலரும் பாராட்டுகள்  தெரிவித்துவருகின்றனர்.
 
சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் பல பெரும் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில், ராணிப்பேட்டை பாலாறு மாசுக்கு காரணமாக இருந்த ஆலைகளிடம் இருந்து ரூ.6 கோடியே 88 லட்சம் அபராதம் வித்து அந்த தொகையை வசூலித்துள்ளார் மாவட்ட  ஆட்சியர் இளம்பகம். இவரது நடவடிக்கைக்க்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.