1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (23:49 IST)

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்- முதல்வர் முக ஸ்டாலின்

MK Stalin
நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம்  மோகனூர் வட்டம் மேட்டுத்தெரு பகுதியில் இன்று அதிகாலை வேளையில், அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில், தில்லைக்குமார், பிரியா, செல்வி, பெரிக்காள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  முதல்வர் முக. ஸ்டாலின்  இரங்கல் மற்றும் ஆறுதல் கூறியதுடன், இவ்விபத்தில்  உயிரிழந்தவருக்கு தலா 2 லட்சம்  காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.